Monday, July 5, 2021

ஜூலை-5 நாள்! : ஸ்டாலின் தி


பேருந்திலிருந்து இழுத்து போடப்பட்ட அந்த இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். ரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.

துரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30 ஆம்தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது. அதற்கும் இல்லாத பழக்கமாக தலித்துகளும் ஏலத்தில் பங்கெடுக்க திரண்டனர். இதைக் கண்டித்து அம்பலக்காரர்கள் ஏலத்திலிருந்து விலகிப்போனார்கள். ஆனாலும் பூர்ண பிரகாஷ் என்னும் அம்பலக்காரர் மட்டும் கலந்துகொண்டார். தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகத்திற்கே ஏலமும் கிடைத்தது. 'கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?' என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதி மன்றத்திற்கு சென்றனர் அம்பலச்சாதிக்காரர்கள். ஆனால், சென்னை உயர் நீதி மன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22 ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதை தீவிரப்படுத்தினார்கள்.
தங்களின் நிலத்தில் இனி வேலைசெய்யக்கூடாது என்று தலித்துகளுக்கு தடை போட்டனர் சாதிவெறியினர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப்போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3 ஆம்தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள். கொலை முயற்சி பிரிவு மற்றும் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கெல்லாம் போட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை அன்றைய ஜெயலலிதா அரசின் காவல்துறை. காவல்துறையின் இந்த கையாலாகாத்தனம் தான் சாதிவெறியர்கள் இன்னும் தீவிரமாக இயங்கக் காரணமாகவும் ஆனது.
மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சமாதானப் பேச்சுக்காக 1992 ஜூலை 5 ஆம் தேதி இரு தரப்பையும் அரசு அழைத்தது. தலித்துகள் மட்டும் வந்தார்கள். சாதி இந்துக்கள் வரவில்லை. அப்போதாவது அவர்களின் திட்டம் அறிந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் எடுக்கவில்லை. அல்லது திட்டமே ஆளும் தரப்பின் ஆசியுடன் நடந்திருக்கலாம்தான். இரவு எட்டு மணியளவில் அதுவரை காத்திருந்த தலித்துகளை போகச்சொன்னார்கள் அதிகாரிகள். சுமார் பத்து மணி அளவில் சுந்தர்ராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக்கூட்டம். (இதே ராமர்தான் மேலவளவு கொலையையும் செய்தவன். ) எல்லோர் கையிலும் ஆயுதங்கள். பேருந்தில் இருந்த காவலர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்களெல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக்கும்பலிடம் சிக்கிக்கொண்டனர்.
பேருந்திலிருந்து இழுத்து போடப்பட்ட அந்த இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். ரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.
சமாதானத்திற்கு என நம்பி வந்த இரண்டு மனிதர்களை சுமார் முப்பது சாதிவெறி மிருகங்கள் வெறி தீர வெட்டிக்கொன்ற நாள் இன்று.
எம் நிலவுரிமைப் போராளிகளுக்கு வீரவணக்கம்.

No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...